கருடன் பட இயக்குநருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்

 
சரவணன்

பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் கடந்த 2022 ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தார். முதன்முதலில் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான ’லெஜன்ட்’ என்ற படத்தில் நடித்த சரவணனுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது 

Image


இந்த நிலையில் சற்றுமுன் லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டாவது படத்தின் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் அந்த பதிவில் ’புதிய விளையாட்டு ஆரம்பம்’ எனக் குறிப்பிட்டுள்ள அவர் இயக்குனர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தின் இயக்குனர் என்பதையும் அறிவித்துள்ளார்.  சமீபத்தில் சூரி நடித்த ’கருடன்’ திரைப்படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார் என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.