லியோ படத்திற்கு வந்த புது சிக்கல் - சம்பளம் வழங்கவில்லை என நடன கலைஞர்கள் புகார்

 
tn

லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடிதான் பாடலுக்கு நடனம் ஆடிய 1,300 பேருக்கும் சம்பளம் வரவில்லை என நடன கலைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று முன் தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

leo

இந்த நிலையில்,  லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடிதான் பாடலுக்கு நடனம் ஆடிய 1,300 பேருக்கும் சம்பளம் வரவில்லை என நடன கலைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நான் ரெடிதான் பாடலுக்கு நடனமாடி 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் படக்குழு இன்னும் சம்பளம் வழங்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளனர். லியோ டிரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசியது தொடர்பாக படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.