வேகமெடுக்கும் டெங்கு : மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்!

 
radhakrishnan

மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பருவ கால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.  இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. உடலையும் ,சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.  ஏடிஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.  டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நேரத்தில் உயிரிழப்பு அபாயம் ஏற்படும்.

dengue

கண் வலி ,குமட்டல், தலைவலி ,வாந்தி, எலும்பு வலி ,தடிப்புகள் ,அசாதாரண ரத்தப்போக்கு, மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி விசாலமாக வீடு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

dengue

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; டெங்கு, மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும்; நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.