டிஆர்பி தேர்வில் முறைகேடு... 66 பேருக்கு வாழ்நாள் தடை!

 
டிஆர்பி

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர், ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் ஆகிய பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2017 செப்டம்பர் 16ஆம் தேதி அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடத்தப்பட்டது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: பாடவாரியாக மதிப்பெண்கள்  அறிவிப்பு | PG teacher exam result - hindutamil.in

இந்தத் தேர்வில் முறைகேடுகள் அம்பலமாகின. தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மதிப்பெண் பதிவு செய்யும் நிலையில் இந்த முறைகேடுகள் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதன் எதிரொலியாக தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து சென்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே 2020 மே மாதம் விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. 

சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு : ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு

2017ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான இணையவழி தேர்வு இந்த மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த 66 பேரின் பெயர், முழு முகவரி, பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.