ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி... கிருஷ்ணகிரியில் பரபரப்பு...

 
காதல் ஜோடி தற்கொலை

ரயில் முன் பாய்வது, விஷம் அருந்துவது என காதல் ஜோடிகளின்  தற்கொலை விவகாரங்கள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நேற்று முன்தினம் சென்னை அம்பத்தூரில்  காதலுக்கு பெற்றோர்  எதிர்ப்பு தெரிவித்ததால்,  ஒரு காதல் ஜோடி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட  அம்பவம் அரங்கேறியது. இந்த அதிர்ச்சி  மறைவதற்குள்ளாக இன்று கிருஷ்ணகிரியில்  ஓரும் பேருந்தில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 3வது நாளில் காதலனுடன் விஷம் குடித்த இளம்பெண்! விசாரணையில் வெளிவந்த உண்மை!

விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும்,  காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த ஜோடி இன்று கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சென்று கொண்டிருந்த போதே ராஜேஷும், லோகேஸ்வரியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  இதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தவறான வார்த்தைகளால் திட்டிய பெண் உதவி ஆய்வாளர்.. மனமுடைந்த மகளிர் குழு தலைவி விஷம் குடித்து தற்கொலை!

இதனையடுத்து காதல் ஜோடியை உடனடியாக மீட்ட சக பயணிகள், சிகிச்சைக்காக  சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளைக்கப்பட்டு வருகிறது.  பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிகாததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.