நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: சிறுமி எடுத்த விபரீத முடிவு..!!

 
suicide suicide

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 
சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார்.   தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வரும்  இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ மருத்துவம் படித்து வருகிறார்.  பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்த இரண்டாவது மகள் மதன ஸ்ரீ , மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வை எழுதி இருந்தார். கடந்த ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதன ஸ்ரீ குறைந்த மதிப்பெண்களே பெற்றதாக தெரிகிறது.  

NEET EXAM

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ நேற்று இரவு 11 .30 மணிக்கு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மின்விசிறி யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறிமி தற்கொலை  தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.