#MKStalin வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்: மு.க.ஸ்டாலின்.

 
Stalin
பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? 
தி.மு.க. மேல் அவர் ஆத்திரம் கொள்வது ஏன்? என்பது குறித்து திருவாரூரில் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் முக்கிய காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்.
 தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத பாஜகவிற்கு, தமிழக மக்கள் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை காட்டுகின்றார்.
ஒவ்வொரு மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்து வந்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார். 
 எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை 'இந்தியா' கூட்டணி கலைத்துவிட்டது.
 தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை 'இந்தியா' கூட்டணி கெடுத்துவிட்டது. 
 அதனால் தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதுபோல் எத்தனையோ ஏச்சுகள், ஏளனங்கள், அரட்டல்கள், மிரட்டல்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள்தான் நாங்கள். வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்,என்று பேசினார்.