மதுரை - எழும்பூர் : தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

 
Railway Station

மதுரையில் இருந்து எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு சென்னை வரவேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1.15 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும்.  

ரயில்

விஜயவாடா-குண்டக்கல் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 24-ந் தேதி (நாளை) முதல் 28-ந் தேதி வரை பித்ரகுண்டாவில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 17237) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, இதே நாட்களில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17238) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.  சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் (22675) பொன்மலை மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.