மதுரை சித்திரை பொருட்காட்சி ஜூன் 13-ல் நிறைவு!!

 
TN

மதுரை சித்திரை பொருட்காட்சி ஜூன் 13-ல் நிறைவடைகிறது.

tn

சித்திரைத் திருவிழாவை ஒட்டி ஆண்டுதோறும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் சித்திரை பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பொருட்காட்சி தொடங்கியது.  செய்தி மற்றும் மக்கள் தொடர்பு  துறை ,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ,பள்ளி கல்வித்துறை ,இந்து சமய அறநிலையத்துறை காவல்துறை உட்பட அரசு துறையின் 27 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன .

tn

தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் மாலை 3:45 மணி முதல் இரவு 9:30 மணிவரை பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 1.80 லட்சம் பேர் பொருட்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர் .கடந்த ஆண்டு எண்ணிக்கை விட இந்த ஆண்டு 30,000  அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது. 13ஆம் தேதியுடன் பொருட்காட்சி நிறைவடையும் நிலையில் மாணவர்கள் தங்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்டுள்ள  அடையாள அட்டை காண்பித்தால் ,ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளில் சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.