காணிக்கை உண்டியலில் போடும் சுற்றறிக்கை வாபஸ்!

 
tn tn

மதுரையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கோயிலில் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போடும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், மதுரை மாநகரம், நேதாஜிசாலை, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் சட்டப்பிரிவு 46(i)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். மேற்படி திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால் ஆரம்ப காலத்திலிருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. 

இருந்தபோதிலும் திருக்கோயில் செயல் அலுவலரால் தட்டு காணிக்கை தொடர்பாக 07.02.2025 அன்று பிறப்பித்த உத்தரவு மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரால் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை திருக்கோயில் தக்காரிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.