"ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin

அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

gandhi

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், உண்மை - அமைதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!

காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!


அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்!

இதனை #மதநல்லிணக்க_நாள் ஆகக் கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

உறுதியேற்போம்... சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.