"இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம்" - மநீம அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!!

 
ttn

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.

st
நமது 73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 8.30 மணியளவில் மாநிலச் செயலாளர்கள் சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், ஸ்னேஹா மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் மாநிலச் செயலாளர்  சரத்பாபு ஏழுமலை அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில இணை மற்றும் துணைச் செயலாளர்கள், ஆழ்வார்பேட்டை பகுதிக்கான மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ் மற்றும் இப்பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஏற்றியபின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தினம் பற்றிய சிறு சிறு செய்திகளையும், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும், இன்று தேசிய தலைநகரில் நடைபெறும் குடியரசு தின விழாவில் நம் மாநிலத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்தையும்; அதற்காக சொல்லப்பட்ட காரணங்களைப் பற்றியும் மாநிலச் செயலாளர்கள் நிர்வாகிகளுக்கு விளக்கினர்.

ttn

அத்துடன் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.