சொத்து தகராறு; அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பாசக்கார தம்பி!

 
ttn

ஆரணி அருகே சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் தம்பியே அண்ணனை பெற்றோல் ஊற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விளைசித்தேரி பகுதியில் வசித்து வரும் வெள்ளை என்பவரது மகன்கள் ரமேஷ், புருஷோத்தமன் மற்றும் ராஜசேகர். புருஷோத்தமன் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகியோர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு திருவண்ணாமலையில் பூர்வீக சொத்து இருந்த நிலையில் மூன்று மகன்களுக்கும் சொத்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

fire

புருஷோத்தமனுக்கு முதலில் 8 லட்சம் ரூபாயும் பிறகு 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகையை கொடுக்காமல் ராஜசேகர் காலம் கடத்தி வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜசேகர், புருஷோத்தமன் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி அவரை எரித்துக் கொன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று காலை புருஷோத்தமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜசேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.