கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் - திமுக கவுன்சிலரின் கணவன் செய்த அடாவடி!!
கொடுத்த கடனை திரும்ப கேட் நபரை அரிவாளை எடுத்துக்கொண்டு ஒன்றிய கவுன்சிலரின் கணவர் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு நத்தமங்கலத்தை சேர்ந்தவர் நித்தியா. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆக உள்ளார். இவரது கணவர் வெற்றி செல்வன் கன்னியாபட்டியில் டாஸ்மாக் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் தெற்கு தக்கமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் வெற்றி செல்வன் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகிறது. பணத்தை குணசேகரன் பலமுறை கேட்டும் வெற்றிச்செல்வன் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார் . இதனால் மனஉளைச்சலில் இருந்த குணசேகரன் மற்றும் சகோதரர்கள் வெற்றி செல்வனின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளனர் .
களத்தில் திமுக கவுன்சிலர்கள் இப்படி இருக்க,முதல்வர் கருப்பு கோட் கெத்தாக போட்டு வருகிறார் என்ற செய்தியை திரு @mkstalin -னும் , திமுகவினரும் தங்களது சாதனை என நம்புவதுதான் வேதனையையும் , தமிழகத்தின் எதிர்காலம் மீதான பெரும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது!pic.twitter.com/VsrpKmvW7K
— Raj Satyen (@satyenaiadmk) August 11, 2022
அப்போது குடிபோதையில் இருந்த வெற்றி செல்வன் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்களை ஓட ஓட விரட்டி உள்ளார் . மனைவியான கவுன்சிலர் நித்தியா அவரை தடுத்தபோதிலும் ஆத்திரம் அடங்காமல் அவர்களை வெகுதூரம் விரட்ட அவர்கள் அலறியடித்து ஒட்டியுள்ளனர். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது . இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்தியாவின் கணவர் வெற்றிச்செல்வனை போலீசார் கைது செய்துள்ளனர்.