இனவரம்பில்லாமல் உதவ முதல்வருக்கு வேண்டுகோள்!!

 
CM MK Stalin

இனவரம்பில்லாமல் முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

 

tn

 தமிழக முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.




இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும்  நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று  இலங்கையில்  நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டுமென கோருகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.