மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு - த்ரிஷா தரப்பு விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம்!!

 
Trisha

லியோ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த  விவகாரம் பூதாகரமான நிலையில்,  த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார்.

tn

இந்த சூழலில் நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்தி,  த்ரிஷா அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. 

tn

இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.