காவல்துறைக்கு மன்சூர் அலிகான் கடிதம்

 
tn

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சையான விவகாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், தான் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் நிலைய காவல்நிலைய ஆய்வாளருக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் அளித்துள்ளார்.

tn

இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் எழுதியுள்ள கடிதத்தில், திரைப்பட நடிகை த்ரிஷா அவர்களை இந்த அரசியல் பேட்டியின் இடையே நான் குறிப்பிட , அது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்க , இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று தாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரிக்க என்னை அழைத்தீர்கள்.  

tn

அம்மா எனது குரல்வளை 15 நாட்களாக தொடர் இருமல் ஆக இருந்து நேற்று மிகவும் பாதிப்படைந்து,  பேச மிக சிரமமாக இருப்பதால் நான் மருத்துவ சிகிச்சையிலிருந்து மீண்டு நாளை தங்களை சந்திக்க , தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.