மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்படும்..

 
தலைமைச் செயலகம்


மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை முழுவதும் இனி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு  அரசாணை வெளியிட்டிருக்கிறது.  

differently abled - மாற்றுத்திறனாளி

தமிழகத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம்  சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000,  பிற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.  இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பாதி ரொக்கமாகவும்,  மீதமுள்ள பாதி  தொகை  தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

பணம்

தற்போது  இந்த முறையை மாற்றி, திருமண உதவித்தொகையாக அளிக்கப்படும்  முழுத் தொகையையும் ரொக்கமாகவே  வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.  அதில்,  “மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 என வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகை தற்போது பயனாளிகளுக்கு முழு தொகையையும் ரொக்கமாக வழங்க அரசு ஆணையிடுகிறது." என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது..