இளம்பெண் முன் சுயஇன்பம்..பதற வைத்த வீடியோ..!

 
1 1

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணி, இலங்கையில் தனியாகப் பயணம் செய்து வருகிறார். அவர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அந்தப் பயணங்களை சமூக வலைதளத்தில் வீடியோக்களாகப் பதிவேற்றி வருகிறார்.

ஆரம்பத்தில், அவரது மூன்று நாள் சுற்றுலாப் பயணம் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி மகிழ்ச்சியாகச் சென்றது. ஆனால், நான்காவது நாளில், அவருக்கு எதிர்பாராத மற்றும் மிகவும் மோசமான ஒரு அனுபவம் ஏற்பட்டது.

நியூசிலாந்தைச் சேர்ந்த அந்த இளம் பெண் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோதான் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இலங்கையில் அவரது 4-ஆம் நாள் பயணத்தை அதிகாலையில் மிகுந்த ஆனந்தத்துடன் துவங்கியுள்ளார். அப்போது அவர் சாலையில் தனிநபராக ஆட்டோ ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்த ஒரு இளைஞர் அந்த பெண்ணின் ஆட்டோவை பின்தொடர்ந்துள்ளார். 

வெளிநாட்டுக்காரர்களை எல்லா ஊரிலும் வித்தியசமாக பார்ப்பார்கள் பெரு நகரங்களில் அந்த பிரச்சனை இல்லை என்றாலும், சிற்றூர்களில் டவுன் மாதிரியான பகுதிகளில் இது போன்ற சிக்கல்கள் உள்ளன. 

அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென ஆட்டோவிற்கு அருகில் வந்து என்னிடம் பேசத் தொடங்கினார். முதலில் அவர் நட்பாக பேசுவதுபோல் தெரிந்தது. ஆனால் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என்று அவர் கேட்டார். அவர் எதற்காக இதையெல்லாம் கேட்கிறார் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் அவர் என்னை பாலியல் உறவுக்கு அழைத்தார். அதோடு, எனக்கு முன்பாகவே ஆபாச செயலில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் எனது சுற்றுலாவை கெடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் எனது மனஉறுதியை இந்த சம்பவம் சற்று குறைத்துவிட்டது. தனியாக பயணம் செய்யும் பெண்கள் சந்திக்கும் சவால் இது. துரதிருஷ்டவசமாக இதுதான் நமது எதார்த்த நிலை. அதே சமயம், இந்த ஒற்றை சம்பவம் முழு இலங்கையை பிரதிபலிக்காது. நான் இங்கு சந்தித்த உள்ளூர் மக்கள் மிகவும் அன்பானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த சுற்றுலா பயணியின் வீடியோவில் பதிவாகி இருந்த 23 வயது வாலிபரை போலீசார் தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.