குளித்தலையில் பரபரப்பு...பொறியியல் கல்லூரி மாணவரின் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர்!

 
kulithalai

கரூர் மாவட்டம் குளித்தலை தனியார் கல்லூரியில் பொறியியல் கல்லூரி மாணவரின் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கல்லூர் பேருந்தில் பயணம் செய்த எம்.பி.ஏ. மாணவர் அண்ணாமலை என்பவர்பொறியியல் மாணவர் நிதிஷ் குமாரின் கழுத்தை திடீரென அறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  படுகாயமடைந்த மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.பி.ஏ., மாணவர் அண்ணாமலையை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில், இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அண்ணாமலை நித்திஷ்குமாரை விரும்பியதாகவும், அண்ணாமலையின் நடவடிக்கையை தெரிந்து கொண்ட நிதிஷ்குமார் அவரிடம் பழகியதை தவிர்த்து வந்த நிலையில் இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை நிதிஷ் குமாரின் கழுத்தை அறுத்தது தெரியவந்துள்ளது.