நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மறுப்பதா? - ஆளுநருக்கு வைகோ கண்டனம்

 
vaiko ttn

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக பேசி வருவது கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர் 'நீட்' தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்கும் போது, "நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்ட மன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதாவை கையெழுத்து இட்டு, ஜனாதிபதிக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் பேசிவருவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.