"நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை தொடங்க வேண்டும்" - முதல்வர் அறிவுறுத்தல்

 
tn

நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை தொடங்க வேண்டும் என்று  முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

stalin

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

vegetables

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளை அதிகப்படுத்த வேண்டும்.  அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை  எடுக்கவேண்டும். குறிப்பாக கொரோனா காலத்தில் செயல்பட்டது போல, மாநகராட்சி மூலம் நடமாடும் காய்கறி கடைகளை தொடங்கலாம் . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு உணவு பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்கள் மேற்கொள்ளலாம்என்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.