தீ விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உடல்களை அடையாளம் காண மருத்துவ குழு அமைப்பு!

 
tn

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது. பயண பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.