நடிகை மீனா கணவர் மரணம் - விஜயகாந்த் இரங்கல்!!

 
tn

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் தொற்று  காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.  மீனா கடந்த  2009ஆம் ஆண்டு பெங்களூரூவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் 3 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் தொற்றிலிருந்து  முழுமையாக குணமாகிய  நிலையில் நுரையீரல் பிரச்னை அதிகமானது. இதனால் கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மீனா கணவர் உயிரிழப்புக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி IPS, வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார்.  மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.