பேருந்து மீது உரசிய மின் வயர் - பெண் பக்தர் மின்சாரம் பாய்ந்து பலி
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து மின்வயரில் உரசியதில் இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சிலர் சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளனர். ஆற்காடு அருகே அந்த பேருந்து வந்துகொண்டிருந்த போது டீ குடிப்பதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், அந்த வழியாக மின் வயர் ஒன்று தாழ்வாக சென்ற நிலையில், அது பேருந்து மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அகல்யா என்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பேருந்தில் இருந்து இறங்க முயன்ற இளம்பெண் அகல்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
காலணி அணியாமல் பேருந்தின் இரும்பு கைப்பிடியைப் பிடித்து இறங்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதாக அவருடன் இருந்த பெண் தெரிவித்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற இருவரையும் மின்சாரம் தாக்கியது. டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்திய போது இந்தச் சம்பவம் நடந்ததுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


