சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்!!

 
water

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை ,திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது, ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம்,  கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் நான்கு நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

lorry

இந்த சூழலில் சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் நாளை முதல் வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

chennai water

போரூர் அருகே குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் சப்ளை பாதிப்பு என மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நாளை முதல் சீராக தண்ணீர் வழங்கப்படும் என மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.