தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது - வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கம்
விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ இரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வந்தது. விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் பணியில் துரிதமாக ஈடுப்பட்டு சரிசெய்யதனர்.
விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.#pressrelease #chennai #chennaimetro #metrotrain #chennaimetrorail #cmrl pic.twitter.com/trZKqWREEO
— Chennai Metro Rail (@cmrlofficial) November 6, 2023
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நீல வழித்தடத்தில் தற்போது மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது, பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரயில்களில் எதிர்பாராத காலகட்டத்தில் திடீர் என்று ஏற்படும் தடங்கல்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மெட்ரோ பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது