மேட்டூா் நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்- பாஜக நிா்வாகி கைது

 
மேட்டூர் நகராட்சி

மேட்டூரில் நகராட்சி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து உயிரோடு எரித்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த  மேட்டூர் நகர பாஜக செயலாளர் கைது செய்யப்பட்டார்.

மேட்டூர் நகராட்சி தேர்தலில் பதவியை மீண்டும் தக்க வைத்த 4 உறுப்பினர்கள் |  SALEM NEWS 4 members retained post in Mettur municipal election

சேலம் மாவட்டம் மேட்டூர் சேலம்கேம்பை சேர்ந்தவர் ராமு என்கிற ராமமூர்த்தி (49) மேட்டூர் நகர பாஜக செயலாளராக உள்ளார். கடந்த 12ம் தேதி குடிநீர் வரி செலுத்துவதற்காக மேட்டூர் சேலம் கேம்பில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சி கணினி மையத்திற்கு சென்றார்.  அப்போது அங்கு பணியில் இருந்த இளநிலை உதவியாளர் தினேஷ் குமாரிடம் தான் வரிசையில் நிற்க முடியாது என்றும் உடனடியாக பணத்தை பெற்றுக்கொண்டு வரி ரசீது போடும்படியும் கூறி இளநிலை உதவியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். அப்போது இளநிலை உதவியாளரை உயிரோடு எரித்து விடுவதாகராமு என்கிற ராமமூர்த்தி மிரட்டினாராம்.

இதுகுறித்து மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்தியா கருமலைக்குடல் காவல் நிலையத்தில் நாகராஜ் இளநிலை உதவியாளர் தாக்கிய ராமமூர்த்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று புகார் அளித்துள்ளார். கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிவு செய்து  மேட்டூர் நகர பாஜக செயலாளர் ராமு என்கிற ராமமூர்த்தியை கைது செய்தார். மேட்டூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2 - ல் ஆஜர் படுத்தினார்கள். நீதித்துறை நடுவர் இம்மாதம் 24 ஆம் தேதி வரை ஓமலூர் கிளை சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.