எம்ஜிஆர் 35ஆவது நினைவு நாள் - ஓபிஎஸ் சார்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 
ops

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆரின் 35-ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

’M.G.R சிலைக்கு காவித் துண்டு’ ஓ.பன்னிர்செல்வம் கண்டிப்பு
இதுக்குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக காலத்தால் அழியாத திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் உள்ளங்களில் இன்றளவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவர் “பாரத ரத்னா” எம்.ஜி.ஆர். அவர்களின் 35-ஆம் ஆண்டு நினைவு நாளான 24-12-2022 (சனிக்கிழமை)  10-30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

இதன் தொடர்ச்சியாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்.

’M.G.R சிலைக்கு காவித் துண்டு’ ஓ.பன்னிர்செல்வம் கண்டிப்பு

மேற்படி நிகழ்ச்சியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் 24-12-2022 அன்று ஆங்காங்கே மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.