"புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க" - கமல் ஹாசன் ட்வீட்!!

 
TN

ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர் எம்ஜிஆர் என்று கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர். 


இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாகத் திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க" என்று குறிப்பிட்டுள்ளார்.