ராயபுரத்தில் எம்ஜிஆர் சிலை மீது மர்மநபர்கள் பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு!

 
tn

சென்னை ராயபுரம் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது மர்மநபர்கள் பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tn

சென்னை ராயபுரம் காளிங்கராயன் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் சிவப்பு கலர் பெயிண்டை  மர்ம நபர்கள் ஊற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி சென்ற நிலையில் சம்பவ இடத்தில் அதிமுகவினர் குவிந்ததால்  பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.