தென் மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

 
அமைச்சர் அன்பில் மகேஷ்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய பின்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மேலும் பொது மக்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இரண்டாம் படி, இடமாற்று சான்றிதழ்களை 15 நாள்களுல் பெறும் வகையில்  இணைய சேவைகயும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “வரலாறு காண மழையால் தென் மாவட்டங்களில்  பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதோடு, மாணவர்களின் புத்தகங்களும் நனைந்து இருக்கிறது. பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டதற்கு பின்பாக விதமான நோய்தொற்றுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்போடு பள்ளிகள் திறக்கப்படும்.

மேலும் அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்பட வேண்டியது இருப்பதோடு, விடுமுறையும் அளிக்க வேண்டியது இருப்பதால், அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்பின் பொழுது மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதேபோன்று விரைவான நடவடிக்கைகள் தென் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும்” என்றார்.