மேட்டூர் அணையை தற்போது திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

 
duraimurugan

நீர் இருப்பு இல்லாததால் மேட்டூர் அணையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 
  
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது.  காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது.

இந்த நிலையில், நீர் இருப்பு இல்லாததால் மேட்டூர் அணையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: 16 ஆயிரம் கன அடி நீர் திறக்க கோரி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம். இது தொடர்பாக சண்டையிட்டு கேட்போம். நீர் இருப்பு இல்லாததால் மேட்டூர் அணையை தற்போது திறக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினார்.