"விஜயகாந்த் மறைவு நாடு கடந்தும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது" - துரைமுருகன் இரங்கல்

 
tn

விஜயகாந்த் மறைவுக்கு  அமைச்சர் துரைமுருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில்  வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

இந்நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு  அமைச்சர் துரைமுருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 

“விஜயகாந்த் நடிகர் என்ற பந்தா இல்லாதவர்
பழகுவதற்கு இனிய நண்பர்; 

தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும்
அதிக பற்று கொண்டவர்;

தமிழுக்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தவர்; 

கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்; அவருடைய மறைவு என்பது
ஜாதி, மதம், மொழி கடந்து,
ஏன் நாடு கடந்தும் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது;

அவரை இழந்து வாடும்
அவருடைய குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
அவருக்கு எனது அஞ்சலி”