அரசியலுக்காகவே திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை - துரைமுருகன் பேட்டி

 
duraimurugan

அரசியலுக்காகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார் என திமுக பொதுசெயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுகன் கூறியுள்ளார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், அரசியலுக்காகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார் என திமுக பொதுசெயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுகன் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசியல் செய்வதற்காகவே திமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு வருவதாக கூறினார்.