சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

 
ev velu

சென்னையில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். 

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னை, கிண்டி கத்திப்பாரா சாலையை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.