"முதல்வருடன் ஒப்பிட்டால் ஈபிஎஸ் 50% கூட அனுபவம் இல்லாதவர்" - அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

 
tn

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மதுரையில் கலைஞர் நூலகத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ . வேலு செய்தியாளர்களை சந்தித்தார்.

tn

 அப்போது பேசிய அவர்,  கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது . மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.கலைஞர்  நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு  நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

gb

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் பயிற்சி பெற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; திராவிடத்துக்குள் ஆன்மிகம் உள்ளது; திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. முதலமைச்சருடன் ஒப்பிட்டால் எடப்பாடி பழனிசாமி 50% கூட அனுபவம் இல்லாதவர்" என்றார்.