விஜய் உடன் பங்கேற்க கூடாது என திருமாவுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை- எ.வ.வேலு

 
ev velu ev velu

விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை என அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

ev velu

மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார், மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் மற்றும் அப்போலோ மருத்துவமனை மேம்பாலப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார், முன்னதாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில் "தமிழகத்தில் பெரும் மழை பெய்த காரணத்தினால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நூலகத்தை நேரில் ஆய்வு செய்தேன், இதுவரை 13,59,996 நபர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்தி உள்ளனர், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மதத்திற்குள்ளாக முடிவடையும், தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது, மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும், இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது, ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாடுங்கள் கட்டப்படுகிறது, ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலங்கள் அதிக அளவில் நீர் வருவதால் சேதமடைகிறது, ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை, எதிர்பாராத விதமாக இது போன்ற ஆற்றுப் பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும். 

ev velu


2001 ஆம் ஆண்டு முதல் திருமாவளவன் உடன் பழகி வருகிறேன், எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர், விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை, எனக்கும், திமுகவுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, திருமாவளவன் அறிவார்ந்தவர் யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார். தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து பராமரித்து வருகிறது, நெடுஞ்சாலைகள் பராமரிப்பு என்று காணப்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம், புகார் தெரிவித்த 48 மணி நேரத்தில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.