"தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் நிரந்தர நியாயவிலை கடைகள் அமைக்கப்படும்" - அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு!!

 
periyasamy

தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் நிரந்தர நியாயவிலை கடைகள் அமைக்கப்படும்.  பகுதிநேர நியாயவிலை கடைகள் அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பேரவையில் பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாய விலை கடைகளை பிரித்து கிறிஸ்தவ தெரு பகுதியில் பகுதி நேர  ரேஷன் கடை அமைக்க ஆவன செய்யுமா அரசு ஆவன செய்யுமா என எம்எல்ஏ துறை சந்திரசேகர் கேள்வி எழுப்பினார். 

ration shop

இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி,  "பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது" என்றார்.

periyasamy

 தொடர்ந்து பேசிய அவர், " சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒரே நியாயவிலை கடைகளில் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் இருக்கிறது.  எங்கெல்லாம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் கடைபிடிக்கப்படும்.  முழு நேர நியாய விலை கடை அமைக்க ரூபாய் 3 லட்சம் செலவாகும்.  இதனால் சொந்த கட்டிடம் கட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் நிரந்தர நியாயவிலை கடைகள் அமைக்கப்படும். பகுதிநேர நியாயவிலை கடைகள் அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இதன் காரணமாக  ஊரக வளர்ச்சி மற்றும் உணவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உடன் ஆலோசித்து விரைவாக பணிகள் தொடங்கப்படும்" என்றார்.