நிபா வைரஸ் பாதிப்பு இல்லை...ஆனால் 4000 பேருக்கு டெங்கு பாதிப்பு - அமைச்சர் தகவல்

 
மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 
தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதகாவும்,   மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான் எனவும் கூறினார். அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.