தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை; ஈபிஎஸ் ஆட்சியில் தான் உயிரிழப்பு அதிகம் - மா.சு.

 
ma su eps ma su eps

எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும், டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில் அதிகம் இருந்தது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

masu


கோவை சிங்காநல்லூர், தாளியூர் பகுதிகளில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிங்காநல்லூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில்  நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. தாளியூர் கட்டிடமும் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2.08 கோடி மதிப்புடைய புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. Gknm தனியார் மருத்துவமனையிலும் இன்று புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற பழைய  கட்டிடத்திற்கு,  கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது. அந்த இடங்களில் புதிய மருத்துவர் நியமிக்க வேண்டியது இல்லை. 

மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவலியர்கள், மருத்தாளுநர்கள் நியமனம் செய்யப்படுகின்றது. 2,253 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 1,066 சுகாதார ஆய்வாளர் நியமனம் குறித்து 38 வழக்குகள் போட்டிருக்கின்றனர். வழக்கு போட்டவர்களை அழைத்து பேசி வருகின்றோம். காலியாக இருந்த கல்லூரி முதல்வர்கள்  நியமனம் தீர்ப்பு வந்த நிலையில் நேற்று செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்குகள் இருப்பதால் பணிநியமனங்களில் தாமதம் ஆகின்றது. வழக்கு போட்டு இருப்பவர்களை அழைத்து பேசி வருகின்றோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 13 வகையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது. ஒப்பந்த அடிப்படையில் வரும் அனைவரையும் பணிநியமனம் செய்ய முடியாது. எம்.ஆர்.பி. மூலம் உரிய தகுதி அடிப்படையில் முறையாக வந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

eps masu

அரசு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் நிறுவனம் ஒப்பந்த பணியாளர் பணியில் ஈடுபடுத்த படுகின்றனர். அது தொடர்பாக புகார்கள் இருந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பணிகள் பருவமழை வரும் போது செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அக் 15 க்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில் அதிகம், கடந்த சில ஆண்டுகளில் டெங்கு இறப்பு 6 பேர்தான். தற்போது டெங்கு  பாதிப்பு  மிக குறைவு. 2012-17 அதிமுக ஆட்சி காலத்தில் டெங்கு  இறப்புகள்  அதிகம். இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லை” என்றார்.