தரமற்ற உணவு வழங்கும் மோட்டல்கள் : டெண்டர் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை..

 
ராஜ கண்ணப்பன்


 பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் மற்றும்  அதிக விலைக்கு உணவுகள் வழங்கும் நெஞ்சாலையோர உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

மோட்டல்கள்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம், தரமற்ற உணவுகள் வழங்குவதாக எழுந்த புகார்  குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.  அப்போது, பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரமற்ற உணவு  வழங்குவதாக புகார் எழுந்து வருகிறது.  விக்கிரவாண்டியில்  நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஒரு ஓட்டலில் காலாவதியான மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள நெஞ்சாலையோர உணவகங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படும்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

டெண்டர் பெறப்பட்ட ஹோட்டல்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த முடியும்.  சாலையோர ஹோட்டல்களில் உணவின் தரம், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் பற்றி புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் மீது விசாரணை நடத்தி அது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் . டெண்டர் எடுத்திருந்தபோதிலும், பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.