தமிழ்நாட்டில் பொய்பிரச்சாரங்களை பரப்புகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் சேகர்பாபு பதிலடி

 
sekar babu

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் பொய்பிரச்சாரங்களை பரப்பி வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வெளியிட்டிருந்த் பதிவில்,  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என தெரிவித்து இருந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்கு கோதண்டராமர் கோவில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

tn

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் பொய்பிரச்சாரங்களை பரப்பி வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பொய்பிரச்சாரங்களை பரப்புகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  நீங்கள் எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும், எவ்வளவு பொய்பரப்புரைகளை பரப்பினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், உங்கள் எண்ணம் ஒரு போதும் தமிழ்நாட்டில் எடுபாடது என கூறினார்.