“இரண்டரை வருட திமுக ஆட்சியில் 34 ஓதுவார்களுக்கு பணி நியமனம்" - அமைச்சர் தகவல்

 
sekar babu

15 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு.

tn
இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

sekar babu

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தமிழில் இறைவனை பாடி வழிபடும் நோக்கில் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளனர்.இரண்டரை வருட திமுக ஆட்சியில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்; மொத்தமாக 107 ஓதுவார்கள் தமிழகம் முழுவதும் பணியில் உள்ளனர்; தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்களாக திருக்கோயில்களில் நியமிக்கபட உள்ளனர்;11 பெண் அர்ச்சகர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.