தமிழிசையை ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்கள் - சேகர் பாபு காட்டம்

 
sekar

மழை, வெள்ள பாதிப்பு தொடர்பான தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்திற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

மழை, வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது.  தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்ல. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு கூறினார். 

இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்திற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் சேகர் பாபு கூறியதாவது: தமிழிசை சௌந்தரராஜனை முதலில் ஆளுநர் வேலையை பார்க்க சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம் என கூறுங்கள். அவர்களுக்கு இருக்கும் பணியை பார்க்க சொல்லுங்கள். புதுச்சேரியில் ஆளுநர் அந்த பொறுப்பிற்கான பணிகளை மேற்கொள்வது நல்லது. இவ்வாறு கூறினார்.