கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்திற்கு சீல்!!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய மின்சார தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்க துறையினர் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் எதிரொலியாக அமலாக்க துறையினர் இன்று நள்ளிரவு செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . விசாரணைக்கு ஆஜராகாமல் அலுவலகத்திற்கு நுழையக்கூடாது என அமலாக்கத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எச்சரிக்கை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.