செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டி மொட்டையடித்த ஆதரவாளர்கள்

 
karur

அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அவரது ஆதரவாளர்கள் மொட்டியடித்து வேண்டுதல் நிறைவேற்றினர். 

சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்க துறையின்  கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு இரண்டு மூன்று நாட்களில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு கரோனரி ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில்,  செந்தில் பாலாஜி விரைவில் குணமடை வேண்டி கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தின் கரூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர். இதேபோல் கோவிலில் அங்கப்பிரதட்சணமும் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பிற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.