போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் வேண்டுகோள்

 
Sivasankar

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

tn

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் சிரமங்களை கரித்துல் கொண்டு போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.