வெள்ள பாதிப்புகளை பார்வையிட நெல்லை விரைகிறார் அமைச்சர் உதயநிதி!

 
உதயநிதி ஸ்டாலின்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை விரைகிறார். 

தென் இலங்கை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து  பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று(டிச.18) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை விரைகிறார். நெல்லை, தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும், மீட்பு பணிகளை கண்காணிக்கவும் செல்கிறார் அமைச்சர் உதயநிதி. தென் மாவட்டங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை ஆய்வு செய்யவுள்ளார்.