சனாதனம் குறித்து நான் பேசியது தவறு இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

 
உதயநிதி ஸ்டாலின்

சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை, சட்டப்படி சந்திக்க தயார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்தார். திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கூறினார். நடவடிக்கை எடுக்காமல் விட்டது போலீசார் தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது எனவும், எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் கூறினார்.

udhayanidhi

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் நீதிபதியின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அம்பேத்கர், பெரியார் பேசியதை விட நான் பேசவில்லை. நான் பேசியது தவறு இல்லை. அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும், முதலில் மனிதனாக இருக்க வேண்டும். சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. சட்டப்படி சந்திக்க தயார்.